வசனம் :
11
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ
11. அவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்வார்கள். குற்றவாளி, அந்நாளில் தன் வேதனைக்குப் பரிகாரமாகத் தன் பிள்ளைகளையும்,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
12
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
12. தன் மனைவிகளையும், தன் சகோதரனையும்,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
13
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ
13. தன்னை ஆதரித்து வந்த தன் சொந்தக்காரர்களையும்,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
14
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ
14. இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரியப்படுவான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
15
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ
15. (எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்து கொள்ளும்.)
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
16
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ
16. அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
17
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ
17. புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
18
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ
18. (பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்).
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
19
۞ إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
19. மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
20
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا
20. ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகிறான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
21
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا
21. அவனை ஒரு நன்மை அடைந்தாலோ, அதை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கிறான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
22
إِلَّا ٱلۡمُصَلِّينَ
22. ஆயினும், தொழுகையாளிகளைத் தவிர.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
23
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ
23. அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
24
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ
24. அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
25
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
25. அதைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால் கேட்காத) வரியவர்களுக்கும் (கொடுப்பார்கள்).
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
26
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
26. கூலி கொடுக்கும் நாளையும் அவர்கள் உண்மை என்றே நம்புகின்றனர்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
27
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ
27. (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
28
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ
28. (ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதல்ல.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
29
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
29. அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
30
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
30. ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
31
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
31. இதைத்தவிர (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
32
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
32. இன்னும், எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி, (யோக்கியமாக நடந்து) கொள்கிறார்களோ அவர்களும்,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
33
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ
33. இன்னும், எவர்கள், தங்கள் சாட்சியத்தில் (தவறிழைக்காது) உறுதியாக இருக்கிறார்களோ அவர்களும்,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
34
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ
34. இன்னும், எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகிறார்களோ அவர்களும்,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
35
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ
35. ஆகிய இவர்கள்தான் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
36
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ
36. (நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்திரம்? (அவர்கள்) உமக்கு முன் ஓடி வருகின்றனர்!
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
37
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
37. வலது புறமிருந்தும், இடது புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக (ஓடி வருகின்றனர்).
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
38
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ
38. அவர்களில் ஒவ்வொருவரும் இன்பம் தரும் சொர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று ஆசைப்படுகின்றனரா?
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
39
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ
39. அது ஆகப்போவதில்லை. அவர்கள் அறிந்த ஓர் (அற்ப) வஸ்துவிலிருந்தே நாம் அவர்களைப் படைத்திருக்கிறோம்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்