அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Abdulhamid Albaqoi

Scan the qr code to link to this page

سورة عبس - ஸூரா அபஸ

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்
Share this page

வசனம் : 1
عَبَسَ وَتَوَلَّىٰٓ
1. (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
வசனம் : 2
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
2. தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
வசனம் : 3
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
வசனம் : 4
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
4. அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
வசனம் : 5
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
5. (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
வசனம் : 6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
6. அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
வசனம் : 7
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
7. அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
வசனம் : 8
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
8. எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
வசனம் : 9
وَهُوَ يَخۡشَىٰ
9. அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
வசனம் : 10
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
10. எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
வசனம் : 11
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
11. அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
வசனம் : 12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
12. எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
வசனம் : 13
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
13. இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
வசனம் : 14
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
14. உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
வசனம் : 15
بِأَيۡدِي سَفَرَةٖ
15. எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
வசனம் : 16
كِرَامِۭ بَرَرَةٖ
16. (அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
வசனம் : 17
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
17. (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
வசனம் : 18
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
18. எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
வசனம் : 19
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
19. ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
வசனம் : 20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
20. பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
வசனம் : 21
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
21. பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
வசனம் : 22
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
22. பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.
வசனம் : 23
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
23. எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
வசனம் : 24
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
24. மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
வசனம் : 25
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
25. நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,
வசனம் : 26
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
26. பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
வசனம் : 27
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
27. பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.
வசனம் : 28
وَعِنَبٗا وَقَضۡبٗا
28. (இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
வசனம் : 29
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
29. ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
வசனம் : 30
وَحَدَآئِقَ غُلۡبٗا
30. கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
வசனம் : 31
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
31. கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
வசனம் : 32
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
32. உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).
வசனம் : 33
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
33. (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
வசனம் : 34
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
34. அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
வசனம் : 35
وَأُمِّهِۦ وَأَبِيهِ
35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
வசனம் : 36
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
36. தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
வசனம் : 37
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
37. அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
வசனம் : 38
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
38. எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
வசனம் : 39
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
39. சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.
வசனம் : 40
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
40. அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
வசனம் : 41
تَرۡهَقُهَا قَتَرَةٌ
41. கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
வசனம் : 42
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
42. இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது