அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Abdulhamid Albaqoi

Scan the qr code to link to this page

سورة الشمس - ஸூரா ஷம்ஸ்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்
Share this page

வசனம் : 1
وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا
1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
வசனம் : 2
وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا
2. (அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,
வசனம் : 3
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
3. (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,
வசனம் : 4
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا
4. (அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,
வசனம் : 5
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
5. வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,
வசனம் : 6
وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا
6. பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,
வசனம் : 7
وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا
7. ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,
வசனம் : 8
فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا
8. அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!
வசனம் : 9
قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا
9. எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்.
வசனம் : 10
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
10. எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்.
வசனம் : 11
كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ
11. ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்.
வசனம் : 12
إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا
12. அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது,
வசனம் : 13
فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا
13. அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.
வசனம் : 14
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا
14. எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.
வசனம் : 15
وَلَا يَخَافُ عُقۡبَٰهَا
15. இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது