الترجمة التاميلية - عبد الحميد باقوي
ترجمة معاني القرآن الكريم
ترجمها الشيخ عبد الحميد الباقوي.
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ
1. குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ
2. பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ
3. தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ
4. அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ
5. (நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா?
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ
6. (அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ
7. (அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ
8, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ
8, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
شارك عبر