Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif
Terjemahan Makna Al-Qur'an al-Karim
Diterjemahkan oleh Syekh Umar Syarif bin Abdussalam.
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
வேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கையிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை.
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا
இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது,
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا
இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்.
يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا
அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا
அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று.
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ
அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பிக்கப்படுவதற்காக.
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ
ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ
இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.
share_via