Header Include

タミル語対訳 - Abdul-Hamid Bakavij

クルアーン・タミル語対訳 - Sh. Abdulhamid Albaqoi

QR Code https://quran.islamcontent.com/ja/tamil_baqavi

عَبَسَ وَتَوَلَّىٰٓ

1. (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)

1. (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)

أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ

2. தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.

2. தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.

وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?

3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?

أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ

4. அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)

4. அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)

أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ

5. (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,

5. (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

6. அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.

6. அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.

وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ

7. அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!

7. அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!

وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ

8. எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,

8. எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,

وَهُوَ يَخۡشَىٰ

9. அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.

9. அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.

فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ

10. எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.

10. எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.

كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ

11. அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.

11. அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

12. எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.

12. எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.

فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ

13. இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);

13. இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);

مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ

14. உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.

14. உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.

بِأَيۡدِي سَفَرَةٖ

15. எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).

15. எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).

كِرَامِۭ بَرَرَةٖ

16. (அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.

16. (அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.

قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ

17. (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.

17. (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.

مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ

18. எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?

18. எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?

مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

19. ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.

19. ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

20. பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.

20. பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ

21. பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.

21. பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

22. பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.

22. பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.

كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ

23. எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.

23. எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

24. மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.

24. மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.

أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا

25. நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,

25. நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,

ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا

26. பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.

26. பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.

فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا

27. பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.

27. பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.

وَعِنَبٗا وَقَضۡبٗا

28. (இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,

28. (இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,

وَزَيۡتُونٗا وَنَخۡلٗا

29. ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,

29. ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,

وَحَدَآئِقَ غُلۡبٗا

30. கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,

30. கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,

وَفَٰكِهَةٗ وَأَبّٗا

31. கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,

31. கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,

مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ

32. உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).

32. உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

33. (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,

33. (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,

يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ

34. அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,

34. அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,

وَأُمِّهِۦ وَأَبِيهِ

35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,

35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ

36. தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).

36. தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).

لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ

37. அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.

37. அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.

وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ

38. எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,

38. எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,

ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ

39. சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.

39. சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.

وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ

40. அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.

40. அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.

تَرۡهَقُهَا قَتَرَةٌ

41. கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).

41. கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).

أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ

42. இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.

42. இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.
Footer Include