Header Include

0

0

QR Code https://quran.islamcontent.com/aa/tamil_omar_brief

لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ

இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ

நீர் இந்நகரத்தில் (எதிரிகளைத் தண்டிக்க) அனுமதிக்கப்பட்டவர்.

நீர் இந்நகரத்தில் (எதிரிகளைத் தண்டிக்க) அனுமதிக்கப்பட்டவர்.

وَوَالِدٖ وَمَا وَلَدَ

தந்தையின் மீதும், அவர் பெற்றெடுத்ததின் மீதும் சத்தியமாக!

தந்தையின் மீதும், அவர் பெற்றெடுத்ததின் மீதும் சத்தியமாக!

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ

திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.

திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.

أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ

தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?

தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?

يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا

அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று கூறுகிறான்.

அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று கூறுகிறான்.

أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ

அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?

அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?

أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ

இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?

இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?

وَلِسَانٗا وَشَفَتَيۡنِ

ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் ஆக்கவில்லையா)?

ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் ஆக்கவில்லையா)?

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ

இன்னும் இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம்.

இன்னும் இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம்.

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ

அவன் ‘அகபா’வைக் கடக்கவில்லை.

அவன் ‘அகபா’வைக் கடக்கவில்லை.

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ

நபியே!) “அகபா” என்றால் என்ன வென்று உமக்கு அறிவித்தது எது?

நபியே!) “அகபா” என்றால் என்ன வென்று உமக்கு அறிவித்தது எது?

فَكُّ رَقَبَةٍ

(அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,

(அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,

أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ

அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,

அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,

يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ

(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,

(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,

أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ

அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்).

அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்).

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ

பிறகு, நம்பிக்கையைக் கொண்டவர் களிலும், பொறுமையைக் கொண்டும் உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டும் உபதேசித்துக் கொண்டவர்களிலும் அவர் ஆகிவிட வேண்டும்.

பிறகு, நம்பிக்கையைக் கொண்டவர் களிலும், பொறுமையைக் கொண்டும் உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டும் உபதேசித்துக் கொண்டவர்களிலும் அவர் ஆகிவிட வேண்டும்.

أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ

இவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (சொர்க்க வாசிகள்).

இவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (சொர்க்க வாசிகள்).

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ

நம் வசனங்களை நிராகரித்தவர்கள்தான் இடப்பக்கமுடையவர்கள் (அவர்கள் நரகவாசிகள்)

நம் வசனங்களை நிராகரித்தவர்கள்தான் இடப்பக்கமுடையவர்கள் (அவர்கள் நரகவாசிகள்)

عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ

(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்)நரகம் அவர்கள் மீது மூடப்படும்.

(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்)நரகம் அவர்கள் மீது மூடப்படும்.
Footer Include