0

पवित्र कुरआन के अर्थों का अनुवाद

0

QR Code https://quran.islamcontent.com/hi/tamil_omar_brief

وَٱلضُّحَىٰ

(முற்)பகலின் மீது சத்தியமாக!

(முற்)பகலின் மீது சத்தியமாக!

وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ

இரவின் மீது சத்தியமாக! அது நிசப்தமாகும்போது,

இரவின் மீது சத்தியமாக! அது நிசப்தமாகும்போது,

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டு (விலகி) விடவில்லை; இன்னும் (உம்மை) வெறுக்கவில்லை.

(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டு (விலகி) விடவில்லை; இன்னும் (உம்மை) வெறுக்கவில்லை.

وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ

இம்மையைவிட மறுமைதான் உமக்கு மிகச் சிறந்தது.

இம்மையைவிட மறுமைதான் உமக்கு மிகச் சிறந்தது.

وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ

திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆகவே, நீர் திருப்தியடைவீர்.

திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆகவே, நீர் திருப்தியடைவீர்.

أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ

உம்மை அநாதையாக அவன் காணவில்லையா? ஆகவே, (உம்மை) அவன் ஆதரித்தான்.

உம்மை அநாதையாக அவன் காணவில்லையா? ஆகவே, (உம்மை) அவன் ஆதரித்தான்.

وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ

உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆகவே, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.

உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆகவே, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.

وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ

அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆகவே, (அவன் உம்மை) செல்வந்தராக்கினான்.

அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆகவே, (அவன் உம்மை) செல்வந்தராக்கினான்.

فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ

ஆக, அநாதைக்கு அநீதி செய்யாதீர்!

ஆக, அநாதைக்கு அநீதி செய்யாதீர்!

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ

ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!

ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!

وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ

ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!

ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!