Terjemahan Berbahasa Tamil - Abdul Hamid Baqawiy
Terjemahan Makna Al-Qur'an al-Karim
Diterjemahkan oleh Syekh Abdul Hamid Al-Baqawi.
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ
1. (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ
2. (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
3. அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ
4. (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ
5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ
6. (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ
7. (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.
share_via