وەرگێڕاوی تامیلی - عبدالحميد باقوی
وەرگێڕانی ماناکانی قورئانی پیرۆز
وەرگێڕان: شیخ عبد الحميد الباقوي.
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ
1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ
2. உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ
3. அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ
4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا
5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا
6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ
7. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب
8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!
share_via