Header Include

0

0

QR Code https://quran.islamcontent.com/ky/tamil_omar_brief

ٱلرَّحۡمَٰنُ

பேரருளாளன்,

பேரருளாளன்,

عَلَّمَ ٱلۡقُرۡءَانَ

குர்ஆனை (உங்களுக்கு) கற்பித்தான்;

குர்ஆனை (உங்களுக்கு) கற்பித்தான்;

خَلَقَ ٱلۡإِنسَٰنَ

மனிதனைப் படைத்தான்.

மனிதனைப் படைத்தான்.

عَلَّمَهُ ٱلۡبَيَانَ

அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்.

அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்.

ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ

சூரியனும் சந்திரனும் (அல்லாஹ் நிர்ணயித்த ஒரு தவணைக்காக அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள நிலைகளை நோக்கி அல்லாஹ்விடம் முடிவு செய்த) ஒரு கணக்கில் ஓடுகின்றன.

சூரியனும் சந்திரனும் (அல்லாஹ் நிர்ணயித்த ஒரு தவணைக்காக அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள நிலைகளை நோக்கி அல்லாஹ்விடம் முடிவு செய்த) ஒரு கணக்கில் ஓடுகின்றன.

وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ

(தண்டுகள் இல்லாத) செடிகொடிகளும் மரங்களும் (அல்லாஹ்விற்கு) சிரம் பணிகின்றன.

(தண்டுகள் இல்லாத) செடிகொடிகளும் மரங்களும் (அல்லாஹ்விற்கு) சிரம் பணிகின்றன.

وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ

வானத்தை - அதை (பூமிக்கு மேல்) உயர்த்தினான். தராசை -நீதத்தை (பின்பற்றப்பட வேண்டிய கட்டாய சட்டமாக) அமைத்தான்.

வானத்தை - அதை (பூமிக்கு மேல்) உயர்த்தினான். தராசை -நீதத்தை (பின்பற்றப்பட வேண்டிய கட்டாய சட்டமாக) அமைத்தான்.

أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ

தராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (அநியாயம் செய்யாதீர்கள்!)

தராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (அநியாயம் செய்யாதீர்கள்!)

وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ

நிறுவையை (தராசின் நாக்கை சரியாக நடுவில்) நீதமாக நிறுத்துங்கள்! தராசில் (பொருள்களை குறைத்து) நஷ்டப்படுத்தாதீர்கள்.

நிறுவையை (தராசின் நாக்கை சரியாக நடுவில்) நீதமாக நிறுத்துங்கள்! தராசில் (பொருள்களை குறைத்து) நஷ்டப்படுத்தாதீர்கள்.

وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ

பூமி - அதை படைப்பினங்களுக்காக (-அவை வாழ்வதற்காக) அவன் அமைத்தான்.

பூமி - அதை படைப்பினங்களுக்காக (-அவை வாழ்வதற்காக) அவன் அமைத்தான்.

فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ

அதில் பழங்களும் குலைகளுடைய பேரீச்ச மரங்களும் இருக்கின்றன.

அதில் பழங்களும் குலைகளுடைய பேரீச்ச மரங்களும் இருக்கின்றன.

وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ

வைக்கோல் உடைய தானியங்களும் (மற்ற) உணவுகளும் அதில் இருக்கின்றன.

வைக்கோல் உடைய தானியங்களும் (மற்ற) உணவுகளும் அதில் இருக்கின்றன.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ

சுட்ட களிமண்ணைப் போல் உள்ள சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை படைத்தான்.

சுட்ட களிமண்ணைப் போல் உள்ள சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை படைத்தான்.

وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ

நெருப்பின் (சிவப்பும் மஞ்சளும் கலந்த) நடு ஜுவாலையில் இருந்து ஜின்களைப் படைத்தான்.

நெருப்பின் (சிவப்பும் மஞ்சளும் கலந்த) நடு ஜுவாலையில் இருந்து ஜின்களைப் படைத்தான்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ

இரு கிழக்கு திசைகள், இன்னும் இரு மேற்கு திசைகளின் இறைவன் அவன்.

இரு கிழக்கு திசைகள், இன்னும் இரு மேற்கு திசைகளின் இறைவன் அவன்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ

(வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்.

(வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்.

بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ

அவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் எல்லையைக் கடக்காது.

அவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் எல்லையைக் கடக்காது.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ

அவை இரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் உற்பத்தியாகின்றன.

அவை இரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் உற்பத்தியாகின்றன.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ

மலைகளைப் போல் கடலில் (பாய் மரத்துணிகள்) விரிக்கப்பட்ட கப்பல்கள் அவனுக்கே உரியன. (அவன்தான் அவற்றை மிதக்கவும் பயணிக்கவும் வைத்தான்.)

மலைகளைப் போல் கடலில் (பாய் மரத்துணிகள்) விரிக்கப்பட்ட கப்பல்கள் அவனுக்கே உரியன. (அவன்தான் அவற்றை மிதக்கவும் பயணிக்கவும் வைத்தான்.)

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ

அதன் மீது இருக்கின்ற எல்லோரும் அழிபவர்கள்தான்.

அதன் மீது இருக்கின்ற எல்லோரும் அழிபவர்கள்தான்.

وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ

பெரும் கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனான உமது இறைவனின் முகம்தான் நிலையாக நீடித்து இருக்கும்.

பெரும் கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனான உமது இறைவனின் முகம்தான் நிலையாக நீடித்து இருக்கும்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ

வானங்களில், பூமியில் உள்ளவர்கள் (எல்லாம்) அவனிடமே (தங்கள் தேவைகளைக் கேட்டு) யாசிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவன் ஒரு காரியத்தில் இருக்கின்றான்.

வானங்களில், பூமியில் உள்ளவர்கள் (எல்லாம்) அவனிடமே (தங்கள் தேவைகளைக் கேட்டு) யாசிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவன் ஒரு காரியத்தில் இருக்கின்றான்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ

மனித, ஜின் வர்க்கத்தினரே உங்களுக்காக (-உங்களை விசாரித்து கூலி கொடுப்பதற்காக) நாம் ஒதுங்குவோம்.

மனித, ஜின் வர்க்கத்தினரே உங்களுக்காக (-உங்களை விசாரித்து கூலி கொடுப்பதற்காக) நாம் ஒதுங்குவோம்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ

ஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் கோடிகளில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது.

ஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் கோடிகளில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(ஜின் இன்னும் மனித வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(ஜின் இன்னும் மனித வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ

நெருப்பின் ஜுவாலையும் உருக்கப்பட்ட செம்பும் உங்கள் இருவர் மீதும் அனுப்பப்படும். நீங்கள் (என்னிடம்) பழிதீர்க்க முடியாது.

நெருப்பின் ஜுவாலையும் உருக்கப்பட்ட செம்பும் உங்கள் இருவர் மீதும் அனுப்பப்படும். நீங்கள் (என்னிடம்) பழிதீர்க்க முடியாது.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ

வானம் பிளந்து விட்டால் அது காய்ந்த எண்ணையைப் போல் ரோஜா நிறத்தில் ஆகிவிடும்.

வானம் பிளந்து விட்டால் அது காய்ந்த எண்ணையைப் போல் ரோஜா நிறத்தில் ஆகிவிடும்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ

அந்நாளில் மனிதர்களோ ஜின்களோ தத்தமது குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள். (நல்லவர் யார், தீயவர் யார் என்று விசாரித்து தான் அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.)

அந்நாளில் மனிதர்களோ ஜின்களோ தத்தமது குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள். (நல்லவர் யார், தீயவர் யார் என்று விசாரித்து தான் அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.)

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ

குற்றவாளிகள் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு விடுவார்கள். உச்சிமுடிகளையும் பாதங்களையும் பிடிக்கப்படும்.

குற்றவாளிகள் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு விடுவார்கள். உச்சிமுடிகளையும் பாதங்களையும் பிடிக்கப்படும்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ

இதுதான் அந்த குற்றவாளிகள் பொய்ப்பிக்கின்ற நரகமாகும்.

இதுதான் அந்த குற்றவாளிகள் பொய்ப்பிக்கின்ற நரகமாகும்.

يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ

அ(ந்)த (நரக நெருப்பி)ற்கு மத்தியிலும் கடுமையாக கொதிக்கின்ற சுடு நீருக்கு மத்தியிலும் அவர்கள் சுற்றி வருவார்கள்.

அ(ந்)த (நரக நெருப்பி)ற்கு மத்தியிலும் கடுமையாக கொதிக்கின்ற சுடு நீருக்கு மத்தியிலும் அவர்கள் சுற்றி வருவார்கள்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ

தன் இறைவனுக்கு முன் தான் நிற்பதை பயந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு.

தன் இறைவனுக்கு முன் தான் நிற்பதை பயந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

ذَوَاتَآ أَفۡنَانٖ

(அந்த இரண்டு சொர்க்கங்களும்) பல நிறங்களுடையவையாகும். (பல வகையான இன்பங்களுடையவையாகும்)

(அந்த இரண்டு சொர்க்கங்களும்) பல நிறங்களுடையவையாகும். (பல வகையான இன்பங்களுடையவையாகும்)

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ

அவை இரண்டிலும் இரண்டு ஊற்றுகள் ஓடும்.

அவை இரண்டிலும் இரண்டு ஊற்றுகள் ஓடும்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ

அவை இரண்டிலும் எல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் உண்டு.

அவை இரண்டிலும் எல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் உண்டு.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ

விரிப்புகளில் சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவற்றின் உள்பக்கங்கள் மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும். இரண்டு சொர்க்கங்களின் கனிகளும் (உண்ண விரும்புபவர்களுக்கு மிக) நெருக்கமாக இருக்கும்.

விரிப்புகளில் சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவற்றின் உள்பக்கங்கள் மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும். இரண்டு சொர்க்கங்களின் கனிகளும் (உண்ண விரும்புபவர்களுக்கு மிக) நெருக்கமாக இருக்கும்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ

அவற்றில் (அந்த விரிப்புகளில் கணவனைத் தவிர மற்ற ஆண்களை விட்டும்) பார்வைகளை தாழ்த்திய பெண்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களை தொட்டு இருக்க மாட்டார்கள்.

அவற்றில் (அந்த விரிப்புகளில் கணவனைத் தவிர மற்ற ஆண்களை விட்டும்) பார்வைகளை தாழ்த்திய பெண்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களை தொட்டு இருக்க மாட்டார்கள்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ

அவர்கள் மாணிக்கத்தைப் போலும் பவளத்தைப் போலும் இருப்பார்கள்.

அவர்கள் மாணிக்கத்தைப் போலும் பவளத்தைப் போலும் இருப்பார்கள்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ

(உலகில் அல்லாஹ்வை பயந்தவர் செய்த) நன்மைக்கு கூலி (மறுமையில் அல்லாஹ் அவருக்கு கொடுக்கின்ற சொர்க்கம் என்ற) நன்மையைத் தவிர வேறு உண்டா?

(உலகில் அல்லாஹ்வை பயந்தவர் செய்த) நன்மைக்கு கூலி (மறுமையில் அல்லாஹ் அவருக்கு கொடுக்கின்ற சொர்க்கம் என்ற) நன்மையைத் தவிர வேறு உண்டா?

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

وَمِن دُونِهِمَا جَنَّتَانِ

அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு.

அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

مُدۡهَآمَّتَانِ

(அவற்றில் மிக அடர்த்தியான பச்சை பசுமையான மரங்கள் இருப்பதால்) அவை இரண்டும் (தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு) கருமையாக இருக்கும்.

(அவற்றில் மிக அடர்த்தியான பச்சை பசுமையான மரங்கள் இருப்பதால்) அவை இரண்டும் (தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு) கருமையாக இருக்கும்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ

அவை இரண்டிலும் பொங்கி எழக்கூடிய இரு ஊற்றுகள் இருக்கும்.

அவை இரண்டிலும் பொங்கி எழக்கூடிய இரு ஊற்றுகள் இருக்கும்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ

அவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரித்த மரங்களும் மாதுளை மரங்களும் இருக்கும்.

அவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரித்த மரங்களும் மாதுளை மரங்களும் இருக்கும்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ

அவற்றில் (குணத்தால்) சிறந்த பெண்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்.

அவற்றில் (குணத்தால்) சிறந்த பெண்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ

(அந்த பெண்கள்) வெள்ளைநிற அழகிகள், (அவர்களுக்குரிய) இல்லங்களில் (அவர்களின் கணவன்மார்களுக்காக மட்டும் அவர்கள்) ஒதுக்கப்பட்டவர்கள். (கணவனைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நாட மாட்டார்கள்.)

(அந்த பெண்கள்) வெள்ளைநிற அழகிகள், (அவர்களுக்குரிய) இல்லங்களில் (அவர்களின் கணவன்மார்களுக்காக மட்டும் அவர்கள்) ஒதுக்கப்பட்டவர்கள். (கணவனைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நாட மாட்டார்கள்.)

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ

இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களைத் தொட்டு இருக்க மாட்டார்கள்.

இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களைத் தொட்டு இருக்க மாட்டார்கள்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ

(சொர்க்க வாசிகள்) பச்சை நிற தலையணைகளின் மீதும், மிக அழகான (மிக நேர்த்தியான) விரிப்புகளின் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

(சொர்க்க வாசிகள்) பச்சை நிற தலையணைகளின் மீதும், மிக அழகான (மிக நேர்த்தியான) விரிப்புகளின் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ

கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனாகிய உமது இறைவனின் பெயர் மிக அருள் நிறைந்தது.

கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனாகிய உமது இறைவனின் பெயர் மிக அருள் நிறைந்தது.
Footer Include