Тамилча таржима - Умар Шариф
Шайх Умар Шариф ибн Абдусалом таржимаси.
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ
புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ
எவன் செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தானோ,
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ
“நிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும்” என அவன் கருதுகிறான்.
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ
அவ்வாறல்ல! நிச்சயமாக அவன் ஹுதமா நரகத்தில் எறியப்படுவான்.
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ
(நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ
அதுதான் அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்.
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ
அது (உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் எட்டிப் பார்க்கும்.
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ
நிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ
உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்படுவார்கள்).
مشاركة عبر