الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
வானம் பிளந்துவிடும் போது,
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
அது தன் இறைவனுக்குச் செவி சாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
இன்னும், பூமி விரிக்கப்படும்போது,
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
இன்னும், அது தன்னில் உள்ளவற்றை (வெளியே) எறிந்து, காலியாகி விடும்போது,
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
அது தன் இறைவனுக்குச் செவி சாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் சிரமத்தோடு முயற்சிப் பவனாக இருக்கிறாய். அடுத்து நீ அவனை சந்திப்பாய்.
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார்.
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
இன்னும் மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
நாசமே! என அவன் கூவுவான்.
وَيَصۡلَىٰ سَعِيرًا
’சயீர்’ என்ற நரகத்தில் அவன் பொசுங்குவான்.
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
நிச்சயமாக அவன் (உலகில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
ஏனில்லை! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
ஆகவே, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்!
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
இரவின் மீது சத்தியமாக! (அது) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
ஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிக்கிறீர்கள்.
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
ஆகவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது)? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
அவர்கள் மீது அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் சிரம் பணிவதில்லை.
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கின்றனர்.
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
ஆகவே, துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
(அவர்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.
مشاركة عبر