الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
இரவின் மீது சத்தியமாக! (அது) மூடும்போது,
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
பகலின் மீது சத்தியமாக! (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது,
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி பலதரப்பட்டதுதான்.
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
ஆக, யார் தர்மம் புரிந்து, இன்னும் அல்லாஹ்வை அஞ்சினாரோ,
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
(இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
சொர்க்கப் பாதையை அவருக்கு இலகுவாக்குவோம்.
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
ஆக, யார் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
இன்னும் (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தானோ,
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
அவனுக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
அவன் (நரகில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது.
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ
நிச்சயமாக நேர்வழி காட்டுவதுதான் நம்மீது (கடமை).
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ
நிச்சயமாக மறுமையும் இம்மையும் நமக்கே (உரியது)!
فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ
ஆகவே, கொழுந்துவிட்டெரிகின்ற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.
لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى
அதில் பற்றி எரிய மாட்டான் பெரும் தீயவனைத் தவிர.
ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
அவன் (நம் மார்க்கத்தை) பொய்ப் பித்தான்; இன்னும் புறக்கணித்தான்.
وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் தான் அதிலிருந்து தூரமாக்கப் படுவார்.
ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ
(அவர்) மனத்தூய்மையை நாடியவராக தன் செல்வத்தைத் (தர்மம்) கொடுக்கிறார்.
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ
ஒருவரின் கூலி கொடுக்கப்படும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இல்லை.
إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ
மிக உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடுவதைத் தவிர (வேறு நோக்கம் அவருக்கில்லை).
وَلَسَوۡفَ يَرۡضَىٰ
(அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக (அவர்) திருப்தியடைவார்.
مشاركة عبر