الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى
(நபியே!) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப் படுத்துவீராக!
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ
அவன்தான் படைத்தான்; இன்னும் ஒழுங்கு படுத்தினான்.
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ
அவன்தான் நிர்ணயம் செய்தான்; இன்னும் வழிகாட்டினான்.
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ
அவன்தான் பசுமையான புல்லை வெளியாக்கினான். (முளைக்க வைத்தான்.)
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ
(பிறகு) அதைக் கருத்த (காய்ந்துபோன) சருகாக ஆக்கினான்.
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ
(நபியே! அல் குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். ஆக, (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர்,
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ
அல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் நன்கறிவான்.
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ
சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்கு வோம்.
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ
ஆகவே, அறிவுரை பலனளித்தால் அறிவுரை கூறுவீராக!
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ
(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.
وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى
இன்னும் பெரும் துர்ப்பாக்கியவான் அதைத் தவிர்த்துவிடுவான்.
ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ
(அவன்) மாபெரும் (நரக) நெருப்பில் பற்றி எரிவான்.
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ
பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும் வாழவும் மாட்டான்.
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ
(இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
இன்னும் (அவர்) தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தார்; இன்னும் (ஐவேளை) தொழுதார்.
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ
மறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும்.
إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ
முந்திய வேதங்களில் நிச்சயமாக இது (கூறப்பட்டு) இருக்கிறது,
صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ
இப்ராஹீம் உடைய இன்னும் மூஸா உடைய வேதங்களில் (கூறப்பட்டிருக்கிறது).
مشاركة عبر