Header Include

0

0

QR Code https://quran.islamcontent.com/sr/tamil_omar_brief

نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ

நூன்.[1] எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!

[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
நூன்.[1] எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!

مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ

உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக் காரராக இல்லை.

உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக் காரராக இல்லை.

وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ

நிச்சயமாக உமக்கு முடிவற்ற நற்கூலி உண்டு.

நிச்சயமாக உமக்கு முடிவற்ற நற்கூலி உண்டு.

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ

நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்.

நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்.

فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ

ஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள்,

ஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள்,

بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ

உங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று.

உங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று.

إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ

நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து வழிதவறியவனை அவன் மிக அறிந்தவன் ஆவான். அவன்தான் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன் ஆவான்.

நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து வழிதவறியவனை அவன் மிக அறிந்தவன் ஆவான். அவன்தான் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன் ஆவான்.

فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ

ஆகவே, (நபியே!) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!

ஆகவே, (நபியே!) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!

وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ

நீர் (அவர்களுடன்) அனுசரித்து போகவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அப்படி யென்றால் அவர்களும் (உம்மை) அனுசரிப்பார்கள்.

நீர் (அவர்களுடன்) அனுசரித்து போகவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அப்படி யென்றால் அவர்களும் (உம்மை) அனுசரிப்பார்கள்.

وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ

அதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்.

அதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்.

هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ

அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோள் சொல்பவன் (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).

அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோள் சொல்பவன் (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).

مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ

நன்மையை அதிகம் தடுப்பவன், எல்லை மீறுபவன், பெரும்பாவி (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).

நன்மையை அதிகம் தடுப்பவன், எல்லை மீறுபவன், பெரும்பாவி (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).

عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ

அசிங்கமானவன், இதற்குப் பிறகு (-இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பதுடன் அவன் ஓர்) ஈனன் (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).

அசிங்கமானவன், இதற்குப் பிறகு (-இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பதுடன் அவன் ஓர்) ஈனன் (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).

أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ

செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்).

செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்).

إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

அவன் மீது நமது வசனங்கள் ஓதப்பட்டால் (இவை) முன்னோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான்.

அவன் மீது நமது வசனங்கள் ஓதப்பட்டால் (இவை) முன்னோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான்.

سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ

(அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்.

(அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்.

إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ

நிச்சயமாக நாம் அவர்களை சோதித்தோம், தோட்டமுடையவர்களை நாம் சோதித்தது போல். “அதிகாலை பொழுதை அவர்கள் அடையும்போது நிச்சயமாக அவர்கள் அதை அறுவடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!

நிச்சயமாக நாம் அவர்களை சோதித்தோம், தோட்டமுடையவர்களை நாம் சோதித்தது போல். “அதிகாலை பொழுதை அவர்கள் அடையும்போது நிச்சயமாக அவர்கள் அதை அறுவடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!

وَلَا يَسۡتَثۡنُونَ

“அல்லாஹ் நாடினால் (நாங்கள் அறுவடை செய்வோம்)” என்று அவர்கள் கூறவில்லை.

“அல்லாஹ் நாடினால் (நாங்கள் அறுவடை செய்வோம்)” என்று அவர்கள் கூறவில்லை.

فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ

அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது உமது இறைவனிடமிருந்து ஒரு கட்டளை அதன் மீது (-அந்த தோட்டத்தின் மீது) இரவில் சுற்றியது.

அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது உமது இறைவனிடமிருந்து ஒரு கட்டளை அதன் மீது (-அந்த தோட்டத்தின் மீது) இரவில் சுற்றியது.

فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ

அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது.

அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது.

فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ

அவர்கள் அதிகாலையில் ஆனவுடன் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.

அவர்கள் அதிகாலையில் ஆனவுடன் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.

أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ

நீங்கள் உங்கள் விவசாய நிலத்திற்கு காலையில் செல்லுங்கள் நீங்கள் (உங்கள் தோட்டத்தின் கனிகளை) அறுவடை செய்பவர்களாக இருந்தால்,

நீங்கள் உங்கள் விவசாய நிலத்திற்கு காலையில் செல்லுங்கள் நீங்கள் (உங்கள் தோட்டத்தின் கனிகளை) அறுவடை செய்பவர்களாக இருந்தால்,

فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ

அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக சென்றனர்.

அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக சென்றனர்.

أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ

இன்றைய தினம் உங்களிடம் ஏழை ஒருவரும் அதில் (-அந்த தோட்டத்தில்) நுழைந்து விடக்கூடாது.

இன்றைய தினம் உங்களிடம் ஏழை ஒருவரும் அதில் (-அந்த தோட்டத்தில்) நுழைந்து விடக்கூடாது.

وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ

அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர்.

அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர்.

فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ

அவர்கள் அதைப் பார்த்த போது நிச்சயமாக நாங்கள் வழிதவறி விட்டோம்.

அவர்கள் அதைப் பார்த்த போது நிச்சயமாக நாங்கள் வழிதவறி விட்டோம்.

بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ

இல்லை, மாறாக நாங்கள் இழப்பிற்குள்ளாகி விட்டோம் என்று கூறினார்கள்.

இல்லை, மாறாக நாங்கள் இழப்பிற்குள்ளாகி விட்டோம் என்று கூறினார்கள்.

قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ

அவர்களில் நீதவான் கூறினார்: “நீங்கள் இன் ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா” என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?

அவர்களில் நீதவான் கூறினார்: “நீங்கள் இன் ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா” என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?

قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ

அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.”

அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.”

فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ

அவர்களுக்குள் பழித்தவர்களாக அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கினர்.

அவர்களுக்குள் பழித்தவர்களாக அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கினர்.

قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ

அவர்கள் கூறினார்கள்: “எங்களின் நாசமே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.”

அவர்கள் கூறினார்கள்: “எங்களின் நாசமே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.”

عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ

எங்கள் இறைவன் எங்களுக்கு அதை விட சிறந்த(தோட்டத்)தை பகரமாக தரக்கூடும். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கம் ஆசை(யும் ஆதரவும்) உள்ளவர்கள்.

எங்கள் இறைவன் எங்களுக்கு அதை விட சிறந்த(தோட்டத்)தை பகரமாக தரக்கூடும். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கம் ஆசை(யும் ஆதரவும்) உள்ளவர்கள்.

كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

இவ்வாறுதான் (நமது) தண்டனை இருக்கும். மறுமையின் தண்டனை (இதை விட) மிகப் பெரியது ஆகும். அவர்கள் (இதை) அறிந்தவர்களாக இருக்க வேண்டுமே!

இவ்வாறுதான் (நமது) தண்டனை இருக்கும். மறுமையின் தண்டனை (இதை விட) மிகப் பெரியது ஆகும். அவர்கள் (இதை) அறிந்தவர்களாக இருக்க வேண்டுமே!

إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ

நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு தங்கள் இறைவனிடம் இன்பம் நிறைந்த “நயீம்” சொர்க்கங்கள் உள்ளன.

நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு தங்கள் இறைவனிடம் இன்பம் நிறைந்த “நயீம்” சொர்க்கங்கள் உள்ளன.

أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ

(நமது கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தவர்களை (-முஸ்லிம்களை), (நமது கட்டளையை மீறுகின்ற) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?

(நமது கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தவர்களை (-முஸ்லிம்களை), (நமது கட்டளையை மீறுகின்ற) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?

مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ

உங்களுக்கு என்ன ஆனது எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள்.

உங்களுக்கு என்ன ஆனது எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள்.

أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ

(நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கிறதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கிறீர்களா?

(நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கிறதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கிறீர்களா?

إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”

(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”

أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ

நிச்சயமாக நீங்கள் (விரும்பியபடி) தீர்ப்பளிப்பதெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கு மறுமை நாள் வரை (நீடித்து இருக்கின்ற)உறுதியான ஒப்பந்தங்கள் (ஏதும்) உங்களுக்கு நம்மிடம் உண்டா? (உங்களுக்கும் நமக்கும் மத்தியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா?)

நிச்சயமாக நீங்கள் (விரும்பியபடி) தீர்ப்பளிப்பதெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கு மறுமை நாள் வரை (நீடித்து இருக்கின்ற)உறுதியான ஒப்பந்தங்கள் (ஏதும்) உங்களுக்கு நம்மிடம் உண்டா? (உங்களுக்கும் நமக்கும் மத்தியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா?)

سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ

(நபியே!) அவர்களிடம் கேட்பீராக! அவர்களில் யார் இதற்கு பொறுப்பாளர் ஆவார்?

(நபியே!) அவர்களிடம் கேட்பீராக! அவர்களில் யார் இதற்கு பொறுப்பாளர் ஆவார்?

أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ

(இவர்களின் கூற்றைப் போன்றே கூறுகின்ற) கூட்டாளிகள் (வேறு யாரும்) இவர்களுக்கு உண்டா? அப்படி இருந்தால் அவர்களின் அந்த கூட்டாளிகளை (தங்கள் சாட்சிகளாக நம்மிடம்) அவர்கள் கொண்டு வரட்டும், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்.

(இவர்களின் கூற்றைப் போன்றே கூறுகின்ற) கூட்டாளிகள் (வேறு யாரும்) இவர்களுக்கு உண்டா? அப்படி இருந்தால் அவர்களின் அந்த கூட்டாளிகளை (தங்கள் சாட்சிகளாக நம்மிடம்) அவர்கள் கொண்டு வரட்டும், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்.

يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ

கெண்டைக்காலை விட்டும் அகற்றப்படுகின்ற நாளில் (-கடுமையான சோதனை நிகழ்கின்ற நாளில் அவர்களை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிய அழைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள்.

கெண்டைக்காலை விட்டும் அகற்றப்படுகின்ற நாளில் (-கடுமையான சோதனை நிகழ்கின்ற நாளில் அவர்களை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிய அழைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள்.

خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ

அவர்களின் பார்வைகள் தாழ்ந்து இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலகத்தில் வாழ்ந்தபோது,) அவர்கள் சுகமானவர்களாக இருந்த போது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.)

அவர்களின் பார்வைகள் தாழ்ந்து இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலகத்தில் வாழ்ந்தபோது,) அவர்கள் சுகமானவர்களாக இருந்த போது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.)

فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ

என்னையும் இந்த வேதத்தை பொய்ப்பிப்பவர்களையும் விட்டுவிடுவீராக! நாம் அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப்பிடிப்போம்.

என்னையும் இந்த வேதத்தை பொய்ப்பிப்பவர்களையும் விட்டுவிடுவீராக! நாம் அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப்பிடிப்போம்.

وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ

இன்னும் அவர்களுக்கு நாம் தவணை அளிப்போம். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக பலமானது.

இன்னும் அவர்களுக்கு நாம் தவணை அளிப்போம். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக பலமானது.

أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ

(நபியே!) இவர்களிடம் கூலி ஏதும் நீர் கேட்கின்றீரா? (அதனுடைய) கடனால் அவர்கள் சிரமப்படுகிறார்களா?

(நபியே!) இவர்களிடம் கூலி ஏதும் நீர் கேட்கின்றீரா? (அதனுடைய) கடனால் அவர்கள் சிரமப்படுகிறார்களா?

أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ

அவர்களிடம் மறைவானவை இருக்கின்றதா? (அதிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை) அவர்கள் எழுதுகின்றனரா? (முஃமின்களை விட நிராகரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவது போல.)

அவர்களிடம் மறைவானவை இருக்கின்றதா? (அதிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை) அவர்கள் எழுதுகின்றனரா? (முஃமின்களை விட நிராகரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவது போல.)

فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ

(நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுமை காப்பீராக! மீனுடையவரைப் போல் (அவர் தனது மக்கள் மீது கோபப்பட்டது போல்) நீர் ஆகிவிடாதீர், அவர் (தனது மக்களை) அழைத்த நேரத்தில், அவர் கடும் கோபமுடையவராக இருந்தார்.

(நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுமை காப்பீராக! மீனுடையவரைப் போல் (அவர் தனது மக்கள் மீது கோபப்பட்டது போல்) நீர் ஆகிவிடாதீர், அவர் (தனது மக்களை) அழைத்த நேரத்தில், அவர் கடும் கோபமுடையவராக இருந்தார்.

لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ

அவருடைய இறைவனிடமிருந்து அருள் அவரை அடைந்திருக்காவிட்டால் (பயங்கரமான) ஒரு பெருவெளியில் அவர் எறியப்பட்டிருப்பார். அவர் (தனது செயலினால்) பழிப்பிற்குரியவராகத்தான் இருந்தார்.

அவருடைய இறைவனிடமிருந்து அருள் அவரை அடைந்திருக்காவிட்டால் (பயங்கரமான) ஒரு பெருவெளியில் அவர் எறியப்பட்டிருப்பார். அவர் (தனது செயலினால்) பழிப்பிற்குரியவராகத்தான் இருந்தார்.

فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ

பிறகு, அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். இன்னும் அவரை நல்லவர்களில் ஆக்கினான்.

பிறகு, அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். இன்னும் அவரை நல்லவர்களில் ஆக்கினான்.

وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ

நிச்சயமாக நிராகரித்தவர்கள் தங்கள் (தீய) பார்வைகளால் உம்மை (உமது இடத்தில் இருந்து) நீக்கிவிட நெருங்கினார்கள், (இந்த வேத) அறிவுரையை செவியுற்ற போது. இன்னும் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்தான்”.

நிச்சயமாக நிராகரித்தவர்கள் தங்கள் (தீய) பார்வைகளால் உம்மை (உமது இடத்தில் இருந்து) நீக்கிவிட நெருங்கினார்கள், (இந்த வேத) அறிவுரையை செவியுற்ற போது. இன்னும் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்தான்”.

وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

அது (-அந்த குர்ஆன்) அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே தவிர வேறில்லை.

அது (-அந்த குர்ஆன்) அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே தவிர வேறில்லை.
Footer Include