Header Include

0

0

QR Code https://quran.islamcontent.com/sr/tamil_omar_brief

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ

(நபியே!) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?

(நபியே!) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?

وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ

(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.

(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.

عَامِلَةٞ نَّاصِبَةٞ

(அவை தண்டனையை) அனுபவிக்கும்; (வேதனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது பாவங்களை நன்மையென எண்ணிச் செயல்பட்டவை; அவற்றில் உறுதியாக இருந்தவை; அவற்றைச் செய்வதில் களைத்தவை)

(அவை தண்டனையை) அனுபவிக்கும்; (வேதனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது பாவங்களை நன்மையென எண்ணிச் செயல்பட்டவை; அவற்றில் உறுதியாக இருந்தவை; அவற்றைச் செய்வதில் களைத்தவை)

تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ

(அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் பற்றி எரியும்.

(அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் பற்றி எரியும்.

تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ

கொதிக்கக்கூடிய ஊற்றிலிருந்து (அவற்றுக்கு நீர்) புகட்டப்படும்.

கொதிக்கக்கூடிய ஊற்றிலிருந்து (அவற்றுக்கு நீர்) புகட்டப்படும்.

لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ

அவற்றுக்கு (-அவர்களுக்கு முட்களை உடைய) விஷச் செடியிலிருந்தே தவிர வேறு உணவு இல்லை.

அவற்றுக்கு (-அவர்களுக்கு முட்களை உடைய) விஷச் செடியிலிருந்தே தவிர வேறு உணவு இல்லை.

لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ

(அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(க பலனளிக்)காது.

(அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(க பலனளிக்)காது.

وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ

(நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;

(நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;

لِّسَعۡيِهَا رَاضِيَةٞ

தன் செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.

தன் செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.

فِي جَنَّةٍ عَالِيَةٖ

(அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.

(அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.

لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ

அதில் (அவை) வீண் பேச்சை செவியுறாது.

அதில் (அவை) வீண் பேச்சை செவியுறாது.

فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ

அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்;

அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்;

فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ

அதில் உயர்வான கட்டில்கள் இருக்கும்;

அதில் உயர்வான கட்டில்கள் இருக்கும்;

وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ

இன்னும் (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்;

இன்னும் (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்;

وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ

இன்னும் (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்;

இன்னும் (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்;

وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ

இன்னும் விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.

இன்னும் விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ

(அவர்கள்) ஒட்டகத்தின் பக்கம் பார்க்க மாட்டார்களா? எவ்வாறு அது படைக்கப்பட்டுள்ளது? என்று

(அவர்கள்) ஒட்டகத்தின் பக்கம் பார்க்க மாட்டார்களா? எவ்வாறு அது படைக்கப்பட்டுள்ளது? என்று

وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ

இன்னும் வானத்தின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது? என்று

இன்னும் வானத்தின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது? என்று

وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ

இன்னும் மலைகளின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது நிறுவப் பட்டுள்ளது? என்று

இன்னும் மலைகளின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது நிறுவப் பட்டுள்ளது? என்று

وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ

இன்னும் பூமியின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது விரிக்கப்பட்டுள்ளது? என்று

இன்னும் பூமியின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது விரிக்கப்பட்டுள்ளது? என்று

فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ

ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.

ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.

لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ

அவர்களை நிர்ப்பந்திப்பவராக நீர் இல்லை.

அவர்களை நிர்ப்பந்திப்பவராக நீர் இல்லை.

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,

எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ

அவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையால் வேதனை செய்வான்.

அவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையால் வேதனை செய்வான்.

إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ

நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.

நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.

ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم

பிறகு நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே (பொறுப்பாக) இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)

பிறகு நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே (பொறுப்பாக) இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)
Footer Include