الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة
புனித குர்ஆன் அர்த்தங்களின் மொழிபெயர்ப்பு
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
(நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
مَلِكِ ٱلنَّاسِ
மக்களின் அரசன் (இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்),
إِلَٰهِ ٱلنَّاسِ
மக்களின் வணக்கத்திற்குரியவன் (இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ
வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ
அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.
share_via