0

புனித குர்ஆன் அர்த்தங்களின் மொழிபெயர்ப்பு

0

QR Code https://quran.islamcontent.com/ta/tamil_omar_brief

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا

சூரியனின் மீது சத்தியமாக! அதன் பகலின் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)

சூரியனின் மீது சத்தியமாக! அதன் பகலின் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)

وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا

சந்திரனின் மீது சத்தியமாக! அதைத் தொடரும்போது,

சந்திரனின் மீது சத்தியமாக! அதைத் தொடரும்போது,

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

பகலின் மீது சத்தியமாக! அதை வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது),

பகலின் மீது சத்தியமாக! அதை வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது),

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا

இரவின் மீது சத்தியமாக! அது (-இரவு) அதை (-சூரியனை) மூடும்போது,

இரவின் மீது சத்தியமாக! அது (-இரவு) அதை (-சூரியனை) மூடும்போது,

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا

வானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!

வானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا

பூமியின் மீது சத்தியமாக! அதை விரித்தவன் மீது சத்தியமாக!

பூமியின் மீது சத்தியமாக! அதை விரித்தவன் மீது சத்தியமாக!

وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا

ஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!

ஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!

فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا

ஆக, அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.

ஆக, அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.

قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا

(இஸ்லாமைக் கொண்டு) அதைப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றி பெற்றார்.

(இஸ்லாமைக் கொண்டு) அதைப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றி பெற்றார்.

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا

அதை(ப் பாவத்தில்) மறைத்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான்.

அதை(ப் பாவத்தில்) மறைத்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான்.

كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ

ஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது.

ஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது.

إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا

அதன் தீயவன் புறப்பட்டபோது,

அதன் தீயவன் புறப்பட்டபோது,

فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் (தடை செய்யாதீர்)” என்று அவர்களுக்குக் கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் (தடை செய்யாதீர்)” என்று அவர்களுக்குக் கூறினார்.

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا

அவரைப் பொய்ப்பித்தார்கள்; அதைக் கொன்றார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்களின் மீது கடுமையான வேதனையை இறக்கினான். அதை (-அந்த சமுதாயத்தை) சமமாக்கினான்.

அவரைப் பொய்ப்பித்தார்கள்; அதைக் கொன்றார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்களின் மீது கடுமையான வேதனையை இறக்கினான். அதை (-அந்த சமுதாயத்தை) சமமாக்கினான்.

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا

(அவன்) அதன் முடிவைப் பயப்பட மாட்டான்

(அவன்) அதன் முடிவைப் பயப்பட மாட்டான்