0

Pagsasalin ng mga Kahulugan ng Marangal na Qur'an

0

QR Code https://quran.islamcontent.com/tl/tamil_omar_brief

ٱلۡقَارِعَةُ

திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.

திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.

مَا ٱلۡقَارِعَةُ

திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்ன?

திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்ன?

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ

(நபியே!) இன்னும் திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

(நபியே!) இன்னும் திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ

(அந்)நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகுவார்கள்.

(அந்)நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகுவார்கள்.

وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ

இன்னும் அந்நாளில் மலைகள் சாயம் ஏற்றப்பட்ட முடியைப்போன்று ஆகும்.

இன்னும் அந்நாளில் மலைகள் சாயம் ஏற்றப்பட்ட முடியைப்போன்று ஆகும்.

فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ

ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,

ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,

فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ

அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்.

அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்.

وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ

ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,

ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,

فَأُمُّهُۥ هَاوِيَةٞ

அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான்.

அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான்.

وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ

(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

نَارٌ حَامِيَةُۢ

(அது) கடுமையாக எரியும் நெருப் பாகும்.

(அது) கடுமையாக எரியும் நெருப் பாகும்.