الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة
ترجمة معاني القرآن الكريم
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
பூமி அதன் நிலநடுக்கத்தால் நடுங்க வைக்கப்படும் போது,
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا
இன்னும் பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும் (போது),
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا
இன்னும் மனிதன் இதற்கென்ன (நேர்ந்தது) எனக் கூறுவான்.
يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا
அந்நாளில் அது (-பூமி) தன் செய்திகளை அறிவிக்கும்.
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا
அதாவது, உம் இறைவன் தனக்கு கட்டளையிட்டான் என்று.
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ
அந்நாளில் மக்கள் பல பிரிவு களாகப் புறப்படுவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பதற்காக.
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ
ஆகவே, யார் ஓர் அணுவளவு நன்மை செய்வாரோ, (அங்கு) அதைப்பார்ப்பார்.
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ
யார் ஓர் அணுவளவு தீமை செய்வாரோ, (அங்கு) அதைப் பார்ப்பார்.
شارك عبر