வசனம் :
1
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ
1. (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
வசனம் :
2
فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ
2. (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.
வசனம் :
3
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
3. அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
வசனம் :
4
فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ
4. (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
வசனம் :
5
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ
5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
வசனம் :
6
ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ
6. (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
வசனம் :
7
وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ
7. (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.