வசனம் :
1
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ
1. (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
வசனம் :
2
مِن شَرِّ مَا خَلَقَ
2. அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,
வசனம் :
3
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
3. (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
வசனம் :
4
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ
4. முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
வசனம் :
5
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
5. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).